| முகப்பு |
|
|
|
|
சகோதரி கிருஷ்ணா ராஜமோகன் அவர்களின் அரிய முயற்சியால் உருவாக்கம் பெற்று 15.2.2007 - அன்று செயல்படத் தொடங்கிய மலேசிய தமிழ் எழுத்துலக இணைய தளம் " மலேசிய தமிழ் எழுத்தாளர்களை உலகளாவிய நிலையில் அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. இவருடன் கைகோர்த்து இந்த வலைதளம் மென்மேலும் வளர துணை புரிவதிலும் இதனை விரிவுபடுத்தவும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் ஆர்வலர்கள் நமது படைப்பிலக்கிய வாதிகளை அறிந்து கொள்ளவும் சங்கத்தின் நடவடிக்கைகளோடு இணைத்து கொண்டு உறவுப் பாலம் அமைக்கவும் இந்த வலைத்தளம் துணை புரியும் என்பது நிச்சயம். கடல் கடந்து வாழ்ந்தாலும் நினைத்த மாத்திரத்தில் கலந்துரையாடவும் உறவாடவும் இந்த மின்னாடல் வழிவகுக்கும். இது புதிய தொடக்கம். ஆனால், மிகப் பெரிய கனவுகளை பின்னணியாக கொண்ட தொடக்கம். தமிழ் ஆர்வலர்கள் உலகத்தில் எத்திக்கில் இருப்பினும், இருந்த இடத்திலிருந்து மலேசியப் படைப்புகளை இணையம் வழி சுவாசிக்கும் நிலையை ஏற்படுத்துவதே சங்கத்தின் தூரநோக்கு திட்டம். அந்த இலக்கை அடைய அனைவரும் தோள் கொடுக்க வேண்டும். அன்புடன் பெ. இராஜேந்திரன் தலைவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழ் மொழியை சுவாசிக்கும் மலேசியப் படைப்பாளர்களே, பன்மொழியும் பல்லின மக்களும் வாழும் மலேசிய நாட்டில், தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய பேரருளார்களை இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள இந்த அகப்பக்கம் நீண்ட யாத்திரை மேற்கொண்டுள்ளது. மலேசியத் தமிழ் எழுத்துலக இணைய தளம் இப்போது புதிய வடிவமைப்புடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் இவற்றை முழுமையாகப் பதிவு செய்யும் இணையத்தளமாகப் புத்தாக்கம் செய்யப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இணையத்தளத்தில் மேலும் பல குறிப்புகள் இணைக்கப்படலாம்.
உணர்வு-ஆக்கம்: |







