|
மணம் கமழும் இனிய தமிழை மலேசிய
மண்ணில் சீரும் சிறப்புமாக வளர்த்து இன்று நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் படி உலா
வரச்செய்த பெருமை தம் எழுத்தாளர்களையே சாரும்
|
சந்திரகாந்தம், ப.
பிறந்த தேதி: 28/2/1941
புனைபெயர்: சந்திரா, கலைத்தூதன், அஸ்வினி.
பணி: முன்னாள் சிரியர்; முன்னாள் பத்திரிகைத் துணையாசிரியர்; முன்னாள் வானொலி
எழுத்தாளர், தயாரிப்பாளர்.
நூல்கள்: "அழுதால் உன்னைப் பெறலாமே" (நாவல், 1975); "டும் மஞ்சள் ஊஞ்சல்" (வரலாற்று
நாவல், 1985); "ஜான் திவி முதல் சாமிவேலு வரை" (வரலாறு, 1988); "மலேசிய
இந்தியர்களின் சமூக அரசியல் வாழ்க்கைப் போராட்டங்கள்" (கட்டுரை, 1995); ""அங்கும்
இங்கும்" (சிறுகதைகள், 1997); "ப. சந்திரகாந்தம் வானொலி நாடகங்கள்" (தொகுப்பு,
1997); "சாதனைப் படிகளில் சாமிவேலு" (வரலாறு, 1999); "கூட்டுறவுக் காவலர்" (வரலாறு,
1999); "வலை" (சிறுகதைகள், 2002); "இருநூறு ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்" (வரலாறு,
அச்சில்); "அமுத சுரபிகள்" (நாவல், அச்சில்).
1960கள் முதல் எழுதி வரும் முன்னணி எழுத்தாளர். 100க்கு மேற்பட்ட ச்¢றுகதைகள்,
9 தொடர்கதைகள், 600க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். சிங்கப்பூர்
வானொலியிலும் நாடகங்கள் எழுதியதுண்டு. தமிழ் நேசன் துணையாசிரியராகவும் பின்னர்
ஞாயிறு பதிப்பின் துணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மலேசியத் தமிழ்
எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராக இருந்ததுண்டு.
பரிசுகளும் விருதுகளும்: குவால லும்பூர் இலக்கியச் சிந்தனை அமைப்பு நடத்திய
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1985); தமிழ் நேசன் குறுநாவல் போட்டியில்
பரிசு (1989); மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம்; பாரதிதாசன்
குழுவினரின் எழுத்தாளர் தின விழாவில் தங்கப் பதக்கம்.
|